ஆப்நகரம்

அடுத்தடுத்து பீமர்களை வீசி மிரட்டிய அசுரன் ஆர்ச்சர்: மரண பீதியடைந்த பேட்ஸ்மேன்..!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் நோபால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Samayam Tamil 28 Dec 2019, 2:46 pm
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் மைதானத்தில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 284 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 181 ரன்களுக்கு சுருண்டது. இதைதொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
Samayam Tamil Archer Bouncer


மரண வேகம்
இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் நைட் வாட்ச்மேனாக நோர்ட்ஜே பேட்டிங் செய்ய வந்தார். போட்டியின் 19ஆவது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசினார். அதன் கடைசி பந்தை புல்டாஸாக வீசினார். இந்த பந்து பேட்ஸ்மேனின் தலைக்கு மேல் சென்றதால் கள அம்பயர் அதை நோ பால் என அறிவித்தனர்.


முடிவை மாற்றிய அம்பயர்
தொடர்ந்து அடுத்த பந்தையும் அதேபோல பேட்ஸ்மேன் தலைக்கு மேல் பீமராக ஆர்ச்சர் வீச மீண்டும் அம்பயர் நோ பால் என அறிவித்தார். ஆனால் சிறிது நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டார். ஐசிசி விதிப்படி ஒரு பவுலர் தொடர்ந்து இரண்டு பீமர்கள் வீசினால், அந்த பவுலருக்கு அந்த இன்ன்னிங்ஸ் முழுதும் பவுலிங் செய்ய தடை விதிக்கலாம். ஆனால் இரண்டாவது நோ-பால் விவகாரத்தில் அம்பயர் முடிவை மாற்றியதால் ஆர்ச்சர் தடையிலிருந்து தப்பினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்