ஆப்நகரம்

England vs Pakistan: இரட்டை சதம் விளாசிய ஜாக் கிரௌலி... 583 ரன்கள் குவித்து இங்கிலாந்து டிக்ளேர்!!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 583 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்துள்ளது. அந்த அணியின் ஜாக் கிரௌலி இரட்டை சதம் விளாசினார்.

Samayam Tamil 23 Aug 2020, 12:36 am
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சௌதாம்படனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து நான்கு விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்திருந்தது.
Samayam Tamil eng batsman


ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாக் கிரௌலி, ஜோஸ் பட்லர் இணையின் சிறப்பான ஆட்டம் இன்றும் தொடர்ந்தது. இந்த இரு வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்களை குவிந்து டிக்ளேர் செய்தது.

ஜாக் கிரௌலி 393 பந்துகளை சந்தித்து ஒரு சிக்ஸர், 34 பவுண்டரிகளுடன் 267 எடுத்தார். ஜோஸ் பட்லர் 311 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர், 13 பவுண்டரியுடன் 152 ரன்களை சேர்த்தார். இந்த பார்ட்னர்ஷிப் 359 ரன்கள் குவித்தது.

England vs Pakistan: இரண்டாம் நாள் ஆட்டம் தொடக்கம்... இரட்டை சதத்தை நோக்கி ஜாக் கிரௌலி!!

அடுத்துக் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஷான் மசூத் 4, பாபர் அசாம் 11, அபித் அலி ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் அசார் அலி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

5 ஆவது விக்கெட் பாட்னர்ஷிஃப்பில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் கிரௌலி-பட்லர் இணை முதலிடத்தில் உள்ளது. 2013 இல் 338 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்காவின் ஸ்மித்-டிவில்லியர்ஸ் இணை இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்