ஆப்நகரம்

இந்தியா-நியூசி., மேட்சையும் விட்டுவைக்காத டெங்கு பயம்!

டெங்கு பரவும் பயத்தால் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க 500வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது தெரியவந்துள்ளது.

TOI Sports 22 Sep 2016, 6:29 pm
கான்பூர்: டெங்கு பரவும் பயத்தால் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க 500வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது தெரியவந்துள்ளது.
Samayam Tamil epidemic dengue and chikungunya keep fans away from the first test
இந்தியா-நியூசி., மேட்சையும் விட்டுவைக்காத டெங்கு பயம்!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன்முதல் டெஸ்ட் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி பங்கேற்கும் 500வது டெஸ்ட் போட்டி என்பதால், பி.சி.சி.ஐ., பல ஏற்பாடுகளை செய்திருந்தது. இருப்பினும் மைதானத்தின் பெரும்பாலானா இருக்கைகள் இன்று காலியாகவே காணப்பட்டது. இதற்கு கான்பூரில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா வேகமாக பரவுவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கூறியது:
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை நான் வாங்கியிருந்தேன். ஆனால் கான்பூரில் சிக்கன்குனியா, டெங்கு வேகமாக பரவும் விஷயம் கேள்விப்பட்டவுடன், நான் என்னுடைய டிக்கெட்டை விற்றுவிட்டேன். இது சரி எனும் விதமாக கிரிக்கெட் வீரர் இஷாந்துக்கும் சிக்கன்குனியா தாக்குதல் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்