ஆப்நகரம்

எர்வின் அபார சதம்: இலங்கையை குப்புறப்போட்டு கும்மி எடுக்கும் ஜிம்பாப்வே!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வீரர் எர்வின் சதம் அடித்து அசத்த அந்த அணி, வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.

TOI Sports 14 Jul 2017, 5:56 pm
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வீரர் எர்வின் சதம் அடித்து அசத்த அந்த அணி, வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.
Samayam Tamil ervines 151 headlines zimbabwes day
எர்வின் அபார சதம்: இலங்கையை குப்புறப்போட்டு கும்மி எடுக்கும் ஜிம்பாப்வே!


இலங்கை சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள் தொடரில் மிரட்டிய ஜிம்பாப்வே அணி, 3-2 என தொடரை கைப்பற்றியது. இதில் நொந்து போன மாத்யூஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில், பேட்டிங் தேர்வு செய்தது.

எர்வின் மிரட்டல்:
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மசகாட்சா (19), சக்காப்பவா (12), முச்காண்டா (6) என டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினர். ஆனால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எர்வின் சதம் அடித்து அசத்தினார்.

பின் வரிசை வீரர்களான சீன் வில்லியம்ஸ் (22), சிக்கந்தர் ராசா (36), மூர் (19), வாலர் (36), கிரீமர் (13) அனைவரும் ஓரளவு மட்டுமே கைகொடுக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி, 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. எர்வின் (151), திரிபானோ (24) அவுட்டாகாமல் உள்ளனர்.

இலங்கை அணி சார்பில், ஹெராத் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்