ஆப்நகரம்

மைதானத்தை கையால் சுத்தம் செய்த வயதான பெண்கள்: கங்குலியை காட்டமாக விமர்சித்த ரசிகர்கள்!

ராஜ்கோட் மைதான ஆடுகளத்தை வயதான பெண்கள் கையால் சுத்தம் செய்ததால் பிசிசிஐ மற்றும் அதன் தலைவர் சவுரவ் கங்குலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Samayam Tamil 20 Jan 2020, 8:38 pm
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டி-20 தொடரின் போது கவுஹாத்தி போட்டி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. முன்னதாக மழை பெய்த போது, மைதான பணியாளர்கள் வழக்கம் போல கவரைக் கொண்டு ஆடுகளத்தை மூடினர். ஆனால் அந்த கவரில் ஒட்டை இருந்ததாக தெரிகிறது. இதில் புகுந்த மழை நீர், ஆடுகளத்தை ஈரப்படுத்தியது. இதனால் மழை நின்ற பின் மைதானத்தை சுத்தம் செய்த போது, ஆடுகளத்தில் இருந்த ஈரத்தால் போட்டி துவங்கப்படவில்லை.
Samayam Tamil Rajkot Pitch


மோசமான் ஏற்பாடு
இதை தொடர்ந்து ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தை சரி செய்ய, வேக்யூம் கிளீனர் கொண்டு ஆடுகளத்தை சரிசெய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஹேர் டிரையர் கொண்டு முயற்சித்தனர். இதுவும் பலன் அளிக்காத காரணத்தால் அயன் பாக்ஸ் கொண்டும் பணியாளர் எடுத்த முயற்சி தோல்வியடைய போட்டி முடிவு எட்டப்படவில்லை என அம்பயர்கள் அறிவிக்க, ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.


கையால் சுத்தம்
இந்நிலையில் இது கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக ராஜ்கோட் ஆடுகளத்தை வயதான பெண்கள் தங்களின் கையால் சுத்தம் செய்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ட்விட்டரில் பதிவு செய்தது. இதையடுத்து ரசிகர்கள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் உலகின் கிரிக்கெட் வல்லரசாக திகழும் பிசிசிஐயை காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.








அடுத்த செய்தி

டிரெண்டிங்