ஆப்நகரம்

போகிற போக்க பார்த்தா குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிருவாங்க போலயே!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வெளியிட்ட போட்டோவிற்கு தவறாக பதில் அளித்த தனது மனைவியை இஷாந்த சர்மா கேலி செய்துள்ளார்.

Samayam Tamil 29 Apr 2020, 7:02 pm
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் இஷாந்த் சர்மா பிரதான பவுலராக உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு இந்திய பவுலர்களின் கைகளை மட்டும் ஒன்றாக இணைத்து யார் யார் இவர்கள் என கண்டுபிடிக்கும்படி பதிவு ஒன்றை வெளியிட்டது.
Samayam Tamil இஷாந்த் ஷர்மா


தவறான பதில்
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “யார் இந்த நான்கு இந்திய பவுலர்கள்” என பதிவிட்டது. இதைப் பார்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் மனைவி பிராத்திமா அஸ்வின் படத்துக்கு பதிலாக தவறாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா என பதில் அளித்திருந்தார்.

View this post on Instagram Guess these four #TeamIndia bowlers ? A post shared by Team India (@indiancricketteam) on Apr 29, 2020 at 12:24am PDT
உண்மையில் அந்த போட்டோவில், புவனேஷ்வர் குமார், ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் அஸ்வினுக்கு பதிலாக தவறாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா என பிராத்திமா பதில் அளித்திருந்தார். இதைபார்த்த இஷாந்த் ஷர்மா அளித்துள்ள பதிலில், “பிராத்திமா பும்ரா ஒரு வேகப்பந்து வீச்சாளர். அந்தளவுக்காவது உனக்கு தெரியும் என நினைத்தேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த எதிரி லெவனை தேர்வு செய்த மைக்கேல் ஹசி... அதுல இந்தியர்கள் யார் யார் இருக்கா தெரியுமா?


இதுக்கும்... அதுக்கும்... என்னங்க சம்மந்தம்: தல தோனி வருகை குறித்து முன்னாள் வீரர் கருத்து!

டெல்லி அணிக்காக
இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இஷாந்த் ஷர்மா டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடாவுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் பிராத்திமா கொரோனா வைரஸூக்கு எதிரான போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்