ஆப்நகரம்

இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? உலகக் கோப்பை ஹீரோ ‘தல’ தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தோனியை கொண்டாடி வருகின்றனர்.

Samayam Tamil 23 Dec 2019, 2:01 pm
ரயிலின் டிக்கெட் கலெக்ட்டராக இருந்து தனது கடின உழைப்பால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவர் முன்னாள் கேப்டன் தோனி. சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்திலேயே தனது துடிப்பான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார்.
Samayam Tamil MS Dhoni


வாழ்க்கை கொடுத்த தாதா
கடந்த 2004 டிசம்பர் 23ஆம் தேதி சிட்டகாங்கில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் தோனி இடம் பிடித்தார். ஆனால் தனது முதல் போட்டியில் தோனி டக் அவுட்டானார்.

மோசமான தொடர்
அந்த தொடர் முழுதுமே தோனிக்கு சிறந்த தொடராக அமையவில்லை. மொத்தமாக 3 போட்டியில் பங்கேற்ற தோனி வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பார்முக்கு வந்த தோனி
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2005இல் நடந்த தொடரில் தோனி பார்முக்கு வந்தார். கங்குலி தோனியை மூன்றாவது வீரராக களமிறக்கிய சோதனை கைமேல் பலன் அளித்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் தோனி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து 128 பந்தில் 148 ரன்கள் விளாசினார்.

ஒரே கேப்டன்
நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் வளர்ந்த தோனி, கேப்டன் பொறுப்பை ஏற்றார். தலைமை பொறுப்பிலும் அசத்திய தோனி, ஐசிசியின் மூன்று உலகக் கோப்பைகளையும் (2007 டி-20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி (மினி உலகக் கோப்பை) ) வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.


மரியாதை
சர்வதேச கிரிக்கெட்டுக்கு தோனி அறிமுகமாகி 15வது ஆண்டு கடந்ததை ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் #15YearsOfDhonism என்ற ஹேஸ்டாக் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேபோல அவரின் ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.





அடுத்த செய்தி

டிரெண்டிங்