ஆப்நகரம்

நிச்சயமா ரிஷப் பந்த் மறுபடி இந்திய அணியில் இடம் பிடிப்பார்: ரிக்கி பாண்டிங்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், மீண்டும் விளையடும் லெவனில் இடம் பிடிப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Jan 2020, 3:26 pm
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். முன்னாள் கேப்டன் தோனிக்கு மாற்று வீரராக வாய்ப்பு பெற்றார் ரிஷப் பந்த். இருந்தாலும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பந்த சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை எனலாம். இதனால் தனது இடத்தை துவக்க வீரர் கே.எல் ராகுலிடம் தற்போது பறிகொடுத்து தவித்து வருகிறார்.
Samayam Tamil Rishabh Pant


பாண்டிங் ஆதரவு
இந்நிலையில் இந்திய அணியின் விளையாடும் லெவனில் ரிஷப் பந்த் நிச்சயமாக மீண்டும் இடம் பிடிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். பாண்டிங், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ரிஷப் பந்த் இடம் பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.

இதுகுறித்து பாண்டிங் கூறுகையில், “ரிஷப் பந்த் ஒரு இளம் வீரர். அவரிடம் அதிகளவில் திறமை உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பந்த் உடன் சேர்ந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளேன். நிச்சயமாக இந்திய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவனில் பந்த் மீண்டும் இடம் பிடிப்பார் என நம்புகிறேன்” என ட்விட்டரில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாண்டிங் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்
சமீபகாலமாக கர்நாடக வீரர் கே.எல். ராகுல் பேட்டிங்கில் அசத்துவதுடன், விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இதனால் இந்திய அணி ராகுலையே விக்கெட் கீப்பராக தொடர் முன்வந்துள்ளது. அதற்கு ஏற்ப நியூசிலாந்து மண்ணில் நடந்த முதல் இரண்டு டி-20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்