ஆப்நகரம்

500வது டெஸ்ட் கிரிக்கெட்: முன்னாள் கேப்டன்களுக்கு கவுரவம்

500வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், முன்னாள் டெஸ்ட் கேப்டன்கள் கவுரவிக்கப்படயிருக்கின்றனர்.

TNN 16 Sep 2016, 9:39 am
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். இதன் காரணமாக இதனை நினைவு கூரும் வகையில் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு வெள்ளி நாணயம் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
Samayam Tamil former captains honoured by indian cricket board
500வது டெஸ்ட் கிரிக்கெட்: முன்னாள் கேப்டன்களுக்கு கவுரவம்


மேலும், முன்னாள் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து கவுரவப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில், முன்னாள் கேப்டன்களான நரி காண்ட்ராக்டர், சந்து போர்டே, வெங்சர்க்கார், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், ஸ்ரீகாந்த், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோர் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மற்றொரு கேப்டனான முகமது அசாரூதீன் இதில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து கோர்ட் இவரை விடுவித்த பின்னரும், இவரை எந்த நிகழ்ச்சிக்கும் கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்