ஆப்நகரம்

Sunil Gavaskar: மீனவர் மகனா கவாஸ்கர்... இப்படி நடந்திருந்தா இவ்வளவு சாதனைகளை எப்படி செய்திருக்க முடியும்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இன்று தனது 69வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த நாளில் அவரை குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலை அறிவோம்.

Samayam Tamil 10 Jul 2018, 10:27 am
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இன்று தனது 69வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த நாளில் அவரை குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலை அறிவோம்.
Samayam Tamil sunil-gavaskar


முன்னால் இந்திய கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான சுனில் கவாஸ்கர் வேகமாக ரன்குவித்த, மெதுவாக ரன் குவித்த வீரர் என பல்வேறு சாதனைகளை அப்போது படைத்தவர். இந்தியா 1983ல் உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்தார். அதன் மூலம் இந்திய கிரிக்கெட் கிரிக்கெட்டின் மறக்க முடியாத முக்கிய வீரராக நினைவில் நின்றார்.

மீனவர் மகன்?
கவாஸ்கர் தன் மாமாவும் முன்னாள் கிரிகெட் வீரருமான மாதவ் மந்த்ரி பாதுகாவலராக வளர்த்து வந்தார். கவாஸ்கர் பிறந்த போது, அவரது தாய்க்கு அருகில் ஒரு மீனவ பெண்ணும் பிரசவம் முடிந்து குழந்தையுடன் படுத்திருந்தார்.

கவாஸ்கர் பிறந்ததும், அவரை பார்த்த அவரின் மாமா கவாஸ்கரின் காதில் உள்ள ஒரு அடையாளத்தை பார்த்து வைத்திருந்தார். ஆனால் மீண்டும் குழந்தையை அவர்களிடம் கொடுக்கும் போது அந்த அடையாளம் இல்லாத குழந்தையை கொடுத்தனர்.

இதையடுத்து இது எங்கள் குழந்தை இல்லை. குழந்தை மாறியுள்ளது என மருத்துவர்களிடம் கூற, கவாஸ்கரை மீனவ பெண்ணிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மாதவ் மந்த்ரியின் அந்த மீனவ பெண்ணின் வீட்டிற்கு சென்று குழந்தை மாறிய விவகாரம் கூறி கவாஸ்கரை மீட்டு கொண்டுவந்துள்ளாராம்.

கிரிக்கெட் வீரரான மாதவ் மந்த்ரியின் வளர்ப்பில் கவாஸ்கர் வளர்ந்ததால் ஒரு பிரபல கிரிக்கெட் வீரராக வந்துள்ளார். ஒரு வேளை மீனவ குடும்பத்தில் வளர்த்திருந்தால் இது சாத்தியமோ இல்லையோ என கவாஸ்கரின் வாழ்க்கையில் சுவாரஸ்யம் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்