ஆப்நகரம்

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 9 Jan 2017, 11:35 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil former india captain sourav ganguly receives death threat
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல்!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இவர், இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்த காலத்தில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய சாதனைகளை இந்தியா படைத்தது. தற்போது கிரிக்கெட்டி போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சவுரவ் கங்குலி, மேற்கு வங்கம் மாநில கிரிக்கெட் வாரியத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

மேலும், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவில் உறுப்பினராகவும் சவுரவ் உள்ளார். இவர், வரும் ஜனவரி 19ம் தேதியன்று மேற்கு வங்கத்தில் உள்ள மித்னாப்பூர் என்ற இடத்தில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் சவுரவ் கங்குலி கொலை செய்யப்படுவார் என, மர்ம நபர் ஒருவர் அவரது தாயாருக்கு கடிதம் மூலமாக, மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 7ம் தேதியன்று இந்த கடிதம் கிடைத்ததாகவும், இதன்பேரில் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தனக்குப் பயம் ஏதும் இல்லை என்றும் கூறிய அவர், தனது தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களே அதிகம் அச்சப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Former India captain Sourav Ganguly today revealed that he has received "death threat" warning him against attending an inter-college cricket meet at the Vidyasagar University in Midnapore on January 19.

அடுத்த செய்தி

டிரெண்டிங்