ஆப்நகரம்

சுரேஷ் ரெய்னா கைது... மும்பை போலீஸ் அதிரடி!

இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 22 Dec 2020, 3:24 pm
இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, திங்கட் கிழமை இரவு மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil file pic


மும்பையில், கொரோனா விதிமுறைகள் காரணமாக இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரெய்னா உட்பட 34 பிரபலங்கள் அதைப் பொருட்படுத்தாமல், இரவு நேரத்தில் ஒரு நட்சத்திர கேளிக்கை விடுதிகளில் பார்டி கொண்டாடியுள்ளனர்.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் அனைவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188, 269, 34 ஆகிய வழக்குகள் பாய்ந்துள்ளது. உடனடி ஜாமின் மூலம் ரெய்னா உட்பட அனைவரும் விடுதலையானதாக மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.

சுரேஷ் ரெய்னா மீது கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

தண்டனை சட்டம் 188: அரசு முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுவது.

முதல் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்!

தண்டனைச் சட்டம் 269: சட்டவிரதோமாக அல்லது அலட்சியமாக ஒரு செயலை செய்து அதன்மூலம் தெரிந்தே நோயைப் பரப்புவது.

தண்டனைச் சட்டம் 34: பலர் ஒன்றுகூடி அரசு உத்தரவு மீறுவது ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவிவருவதால், மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் இரவு நேரக் கேளிக்கை விடுதி போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்