ஆப்நகரம்

சேவக் மனைவிக்கு பெரிய நாமம் போட்டு பண மோசடி செய்த பாட்னர்கள்..!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக்கின் மனைவி ஆர்த்தியை தொழில் பாட்னர்கள் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 13 Jul 2019, 7:06 pm
அந்த புகாரில் தன் கையெழுத்தை பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளார் என்றும், அந்த கடன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil Aarti Sehwag


இது தொடர்பாக ஆர்த்தி அளித்துள்ள புகாரில், ‘தொழில் பாட்னர்கள் என்னிடம் எந்த அனுமதியும் அறிவிப்பும் இன்றி கடன் கொடுப்பவர்களை தொடர்பு கொண்டு, ரூ .4.5 கோடி கடன் பெற்றனர்.

என் கணவர் சேவக் பெயரைப் பயன்படுத்தி, தனது கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளனர்.


இதனால் கடன் வழங்கியவர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். என் கையொழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டது அப்போது தான் தெரியாவந்தது. என குறிப்பிட்டுள்ளார். ஆர்த்தியின் புகார் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்