ஆப்நகரம்

MS Dhoni: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 16 Aug 2020, 5:20 am
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து கடந்த ஓராண்டாகவே பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil msd


தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்துள்ளார். இந்த ஓய்வு அறிவிப்பு இன்றிரவு (ஆகஸ்ட் 15) 7:29 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. என் மீது அளவற்ற அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்" என்று தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக முத்திரைப் பதித்த தோனி, கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, இலங்கைக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் கிரி்க்கெட் போட்டி.யில் முதல்முறையாக களமிறங்கினார்.

சென்னை வந்தார் ‘தல’ தோனி... ட்விட்டரைத் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

அடுத்து, மூன்றே ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தார். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தமது கலக்கலான ஸ்டைலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அவர், 2014 டிசம்பர் 30 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
View this post on Instagram Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired A post shared by M S Dhoni (@mahi7781) on Aug 15, 2020 at 7:01am PDT

இதேபோன்று, 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார்.

கொரோனா டெஸ்ட் ரிசஸ்ட்... தல தோனி ரசிகர்கள் ஹேப்பி!!

இவரது கேப்டன்ஷிப்பில் தான் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக்கோப்பை, ஐசிசி ஆசிய கோப்பை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து தொடர்களில் இந்திய அணி கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.

தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தோனி, அடுத்த மாதம் 19 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார்.

'தல' தோனியை தொடர்ந்து 'சின்ன தல' ரெய்னாவும் ஓய்வு அறிவிப்பு!!

சென்னையை தமது இரண்டாவது சொந்த ஊர் என்று பெருமையுடன் கூறும் தோனி, சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்தபடி தமது ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்