ஆப்நகரம்

என் காலத்துல மட்டும் இவன் இப்பிடி விளையாடிருந்தான்...: மூஞ்சிய உடைச்சிருப்பேன்...: அக்தர்!

புதுடெல்லி: தனது காலத்தில் மட்டும் ஸ்டீவ் ஸ்மித் விளையாடிருந்தால், அவரை ரன் அடிக்கவிடாமல் தடுக்க காயப்படுத்தவும் தயங்கியிருக்க மாட்டேன் என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Nov 2019, 6:29 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். சர்வதேச அரங்கில் தனது அசுரவேகத்தால் அலறவிட்ட பவுலர்களில் ஒருவர். இந்நிலையில் தற்போதைய ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அக்தர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Shoaib Akhtar - Steve Smith


தில் ஜாஸ்தி...
இதுகுறித்து அக்தர் கூறுகையில்,‘ ஸ்மித்தின் பேட்டிங் எனக்கு அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதில் பெரிய நுணுக்கமோ அல்லது ஸ்டைலோ இல்லை. ஆனால் துணிச்சல் அதிகமாக காணப்படுகிறது. அது தான் அவர் சாதிக்க பெரிய அளவில் கைகொடுக்கிறது.

அந்த தோனி இடம் கண்டிப்பா எனக்கு தான்...: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!

சட்டை பண்ணுவதில்லை...
குறிப்பாக முகமது அமீர் பந்துவீச்சை ஸ்மித் கொஞ்சம் கூட சட்டை பண்ணுவது கூட கிடையது. அதை அவர் எப்படி செய்கிறார் என புரியவில்லை. அவர் மட்டும் எனது காலகட்டத்தில் விளையாடியிருந்தால், கண்டிப்பாக 3 அல்லது 4 முறையாவது அவரின் முகத்தை பதம் பார்த்திருப்பேன். அவரை காயப்படுத்தியாவது ரன் சேர்ப்பதை தடுத்திருப்பேன்.

நல்ல டீல் கிடைச்சா டெல்லிக்கு மட்டுமில்ல எந்த டீமுக்கும் அஸ்வின் செல்வார்: நெஸ் வாடியா!

சுலபமல்ல...
ஆனால் ஸ்மித் போன்ற வீரரை காயப்படுத்துவது கூட அவ்வளவு சுலபமான காரியமில்லை. அந்தளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரின் சிறந்த எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள். தடைகாலத்துக்கு பின் மீண்டும் டெஸ்டில் சாதித்த ஸ்மித்தை, சிறந்த டி-20 வீரர் இல்லை என்றனர். ஆனால் அவர்கள் மூஞ்சியில் கரியை பூசி விட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்