உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்ற பிறகு விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. கோலி அணியைச் சரியாக வழிநடத்தவில்லை, அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற அமர்நாத், விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், விராட் கோலி இரண்டு நட்சத்திர வீரர்களின் கலவை எனத் தெரிவித்தார். “விராட் கோலி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இறுதிப் போட்டியில் தோற்றதால் நாம் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களைத் தெரிவிக்கிறோம். இந்த மாதிரி சூழ்நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழத்தான் செய்யும். கோலிக்கு பதிலாக மற்றொரு கேப்டனை நியமிப்பதால் ஒன்றும் ஆகவிடப் போவது கிடையாது. ரிக்கி பாண்டிங் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் இணைந்த கலவைதான் கோலி. இந்த தலைமுறையின் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்திருக்கிறார். இவர் சிறந்த கேப்டனாகவும் திகழ்வார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு இந்திய அணிக் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி, அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறி கோப்பையைத் தவறவிட்டார். அடுத்து 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2021ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டிலும் நியூசிலாந்திடம் கோப்பையைத் தவறவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற அமர்நாத், விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், விராட் கோலி இரண்டு நட்சத்திர வீரர்களின் கலவை எனத் தெரிவித்தார். “விராட் கோலி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இறுதிப் போட்டியில் தோற்றதால் நாம் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களைத் தெரிவிக்கிறோம். இந்த மாதிரி சூழ்நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழத்தான் செய்யும். கோலிக்கு பதிலாக மற்றொரு கேப்டனை நியமிப்பதால் ஒன்றும் ஆகவிடப் போவது கிடையாது. ரிக்கி பாண்டிங் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் இணைந்த கலவைதான் கோலி. இந்த தலைமுறையின் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்திருக்கிறார். இவர் சிறந்த கேப்டனாகவும் திகழ்வார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு இந்திய அணிக் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி, அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறி கோப்பையைத் தவறவிட்டார். அடுத்து 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2021ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டிலும் நியூசிலாந்திடம் கோப்பையைத் தவறவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.