ஆப்நகரம்

துரத்தும் ஓய்வு சர்ச்சை... நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் ‘தல’ தோனி!

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராஞ்சியில் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.

Samayam Tamil 10 Nov 2019, 6:51 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே இவரின் ஓய்வு அறிவிப்பை எதிர்நோக்க் காத்திருக்கிறது. ஆனால் தோனியோ தனது நண்பர்களுடன் பிஸியாக நேரம் செலவிட்டு வருகிறார்.
Samayam Tamil MS Dhoni


பண்ணைவீடு...
இந்நிலையில் தோனி தனது பண்ணைவீட்டில் தனது சிறுவயது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிகழ்ச்சியில் தோனியின் பழைய நண்பர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

புறக்கணிக்கப்படும் தல
இதற்கிடையில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, அவரிடம் பேசி விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் என புதிதாக நியமிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். தோனி கடைசியாக ராஞ்சியில் நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றிக்கு பின் அணி வீரர்களுடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.


ஆனால் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்) தொடரின் அரையிறுதி தோல்விக்கு பின், தோனி தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆனால் தேர்வுக்குழுவினர், தோனியை கடந்து யோசிப்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்