ஆப்நகரம்

IND vs SA: ‘சோலி முடிஞ்சிருச்சு’…இனி அவர் விளையாட வாய்ப்பில்ல: மாற்று வீரர் தயார்: கம்பீர் ஓபன் டாக்!

இந்திய அணி வீரர் இனி விளையாட வாய்ப்பில்லை என கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

Samayam Tamil 13 Dec 2021, 6:22 am
விராட் கோலி இல்லாத சமயத்தில், இந்திய டெஸ்ட் அணிக்கு பொறுப்பு கேப்டனாக இருந்துவந்த அஜிங்கிய ரஹானே தொடர்ந்து ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 4, 37, 24, 1, 0, 67, 10, 7, 27, 49, 15, 5, 1, 61, 18, 10, 14, 0, 35, 4 ஆகிய ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே இருக்கிறது. அதுவும் பெரிய ஸ்கோராக மாற்றப்படவில்லை.
Samayam Tamil கௌதம் கம்பீர்


ஒரே காரணம்:

இதனால், ரஹானே இனி ஓரம் கட்டப்படுவார் எனக் கருதப்பட்ட நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கோலி இல்லாததால், ரஹானே பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். இதுகுறித்து அப்போது பேசிய கம்பீர், “கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ரஹானே அணியில் நீடிக்கிறார்” எனக் கூறினார். அந்த போட்டியில் ரஹானே பெரிய அளவில் சோபிக்கவில்லை. 35, 4 என சொற்ப ரன்கள் மட்டுமே அடித்தார். இருப்பினும், மற்றொரு மிடில் வரிசை வீரர் ஷ்ரேயஸ் ஐயர், அறிமுக போட்டியிலேயே 100+, 50+ ரன்கள் அடித்து கெத்து காட்டினார். அடுத்து இரண்டாவது போட்டியின்போது ரஹானேவுக்கு காயம் எனக் கூறி அவரை நீக்கினார்கள்.

IPL 2022: ‘புதிய இரண்டு அணிகள்’ நீக்கப்பட வாய்ப்பு: பிசிசிஐ சுற்றறிகையால் பரபரப்பு…அதிர்ச்சியில் வீரர்கள்!

பதவி பறிப்பு:

ரஹானே தொடர்ந்து ரன்களை குவிக்காத போதிலும் தொடர்ந்து அணியில் நீடித்ததற்குக் காரணம், அவர் துணைக் கேப்டன் என்பதால்தான். கோலி இல்லாதபோது கேப்டனாகவும் இருந்து வந்தார். இந்த ஒரு விஷயம் மட்டுமே அவரை காப்பாற்றி வந்த நிலையில், தற்போது அந்த பதவி பறிக்கப்பட்டு ரோஹித் ஷர்மாவிடம் வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கு ரஹானே ஒரு வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.

கம்பீர் பேட்டி:

இதுகுறித்து பேசிய கம்பீர், “ரஹானேவுக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம். அவர் தொடர்ந்து ரன்களை குவிக்க திணறி வருகிறார். இதனால், அவருக்கு பிளையிங் XI-ல் இடம் கிடைப்பது கடினம். ஷ்ரேயஸ் ஐயர் நல்ல பார்மில் இருப்பதாலும், முதல் போட்டியிலேயே திறமையை நிரூபித்துவிட்டதாலும், இனி அவருக்குத்தான் இடம் கிடைக்கும். ஷ்ரேயஸை அணி நிர்வாகத்தால் கூட நீக்க முடியாது. மறுபக்கம் ஹனுமா விஹாரியும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால், தென்னாப்பிரிக்க தொடரின்போது ரஹானே விளையாட வாய்ப்பில்லை. அதன்பிறகு அவர் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்