ஆப்நகரம்

இங்கிலாந்தை சமாளித்து விளையாடும் இந்தியா

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது.

TOI Sports 10 Nov 2016, 5:08 pm
ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது.
Samayam Tamil gambhir vijay solid ind face uphill task
இங்கிலாந்தை சமாளித்து விளையாடும் இந்தியா


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், மொயின் அலி (99), ஸ்டோக்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இன்றைய இரண்டாவது நாள் ஆட்டதுவக்கத்திலேயே அலி, சதம் அடித்தார். இவர் 117 ரன்கள் எடுத்த போது, ஷமி வேகத்தில் போல்டானார். பின் வந்த பேரிஸ்டோவ், அனல் வேகத்தில் ரன்கள் சேர்த்தார். 57 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் (128) சதம் அடித்து அவுட்டானார். கடைசிநேரத்தில் அம்சாரி (32) ஓரளவு கைகொடுக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. பிராட் (10) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில், ஷமி, யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். மிஸ்ரா 1 விக்கெட் கைப்பற்றினார்.

இதைதொடர்ந்து இந்தியாவின் முரளி விஜய், கவுதம் கம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளித்து ரன்களை சேர்த்தனர். ஆட்ட நேர முடிவில் கவுதம் கம்பீர் 68 பந்துகளில் 28 ரன்களும், முரளி விஜய் 70 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்