ஆப்நகரம்

தண்டனையில் இருந்து தப்பித்த கவுதம் காம்பிர்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள் விளையாட விதிக்கப்பட்ட தடையில் இருந்து தப்பித்துள்ளார்.

TNN 18 Jun 2017, 8:34 am
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள் விளையாட விதிக்கப்பட்ட தடையில் இருந்து தப்பித்துள்ளார்.
Samayam Tamil gautam gambhir escapes punishment after justice sen overturns four match ban
தண்டனையில் இருந்து தப்பித்த கவுதம் காம்பிர்!


டெல்லி ரஞ்சி அணியின் பயிற்சியாளர் கேபி பாஸ்கர் உடன் கவுதர் காம்பிருக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து நான்கு ஃபர்ஸ் கிளாஸ் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் நிபந்தனைகளுடன் இரண்டு ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழுவானது டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகி நீதிபதி விக்ரம்ஜித் சென்னால் அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மதன் லால், ராஜேந்திரா ஆர் ரதோர் மற்றும் வழக்கறிஞர் சோனி சிங் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கவுதம் காம்பிர் பயிற்சியாளர் உடன் மோதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 4 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாட தடை விதிக்காமல், தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது மார்ச் 30 2019 வரை நிபந்தனையுடன் நீதிபதி விக்ரம்ஜித் சிங் ஒத்திவைத்தார். டெல்லி ரஞ்சி அணி ஒரிசாவில் இருந்த போது காம்பிருக்கும், பயிற்சியாளர் பாஸ்கர் பிள்ளைக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் பயிற்சியாளருடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதலில் 4 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாட கவுதம் காம்பிருக்கு தடைவிதித்து கமிட்டி முடிவு செய்தது. ஆனால் நீதிபதி தலைமையிலான குழு தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. இது போன்ற செயல்களில் இனி ஈடுபட கூடாது என்றும் கிரிக்கெட் கமிட்டி எச்சரித்துள்ளது. கவுதம் காம்பிர் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து தற்காலிகமாக தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்