ஆப்நகரம்

தவானின் ரணகளத்தில் குதுகலிக்கும் காம்பீர்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இடது கையில் காயாம் ஏற்பட்டு போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டதால், மூன்றாவது டெஸ்டில் கம்பீர் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது.

TOI Sports 4 Oct 2016, 3:52 am
புதுடெல்லி : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இடது கையில் காயாம் ஏற்பட்டு போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டதால், மூன்றாவது டெஸ்டில் கம்பீர் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது.
Samayam Tamil gautam gambhir happy about dhawans injury
தவானின் ரணகளத்தில் குதுகலிக்கும் காம்பீர்


இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்கத்தாவில் நடந்தது. இதில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இடம்பெற்றிருந்த துவக்க வீரர் சிகர் தவானின் இடது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 10 -15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தவான் இந்த போட்டித்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கருண் நாயர் என்ற இளம் வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய கே எல் ராகுலுக்கு பதிலாக இரண்டு வருடத்திற்கு முன் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்ட கவுதம் காம்பீர், உள்ளூர் தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுலுக்கு பதிலாக சிகர் தவானை அணியில் சேர்க்கப்பட்டார். இதனால் சோகமாக இருந்த காம்பீர் மீண்டும் குதுகலிக்கும் வண்ணம் தவானுக்கு காயம் என்ற செய்து அவருக்கு கிடைத்துள்ளது.

காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ள தவானின் இடத்தை நான் பிடித்தே தீருவேன் என்ற நம்பிக்கையில் உள்ளார் கவுதம் காம்பீர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், இந்தூரில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் சேர்க்கும் பட்சத்தில் சிறப்பாக செயல் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்