ஆப்நகரம்

T20 World Cup 2021: இந்திய அணியின் பேட்டிங் வரிசை...எப்படி இருக்க வேண்டும்? கவாஸ்கர் பரிந்துரை!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து கவாஸ்கர் பேசியுள்ளார்.

Samayam Tamil 13 Sep 2021, 11:27 am
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
Samayam Tamil சுனில் கவாஸ்கர்


இந்திய அணி அறிவிப்பு:

இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கான, வேலைகளையும் பிசிசிஐ தீவிரமாகச் செய்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு அணியை அறிவித்தது.

இந்திய அணி: ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், ராகுல் சஹார், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

ரிசர்வ் வீரர்கள் - ஷ்ரேயஸ் ஐயர், ஷர்தூல் தாகூர், தீபக் சஹார்.

கவாஸ்கர் பேட்டி:

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். ‘‘டி20 உலகக் கோப்பையில் ஓபனராக ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் களமிறங்க வேண்டும். இருவரும் மிகச்சிறந்த வீரர்கள். இதனால், இந்திய அணிக்கு நிச்சயம் சிறப்பான துவக்கம் கிடைக்கும். கோலி ஓபனராக களமிறங்கினால் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் களமிறங்க முடியும். அடுத்து நான்காவது இடத்தில் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட வேண்டும். டெத் ஓவர்கள் சமயத்தில் மட்டும் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா ஆகியோரில் ஒருவரை நான்காவது இடத்தில் களமிறக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

கோலிக்கு நெருக்கடி:

விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுகொடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிவரை முன்னேறித் தோற்றது. அடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, இறுதிப் போட்டிவரை சென்று தொற்றது. இதனால், கேலி மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த விமர்சனங்களில் இருந்து விடுபட டி20 உலகக் கோப்பையை வெல்ல கோலியின் இந்திய அணி தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்