ஆப்நகரம்

‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹர்திக் பாண்டியா, நடராஜன் குறித்துப் பேசினார்.

Samayam Tamil 3 Dec 2020, 8:25 am
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். விருது பெற்றப் பின்பு பேசிய ஹர்திக் பாண்டியா, “தான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். டி20 தொடர்களில் நான் நிச்சயம் பங்கேற்பேன். தாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமைக் கூறியது. ஒருநாள் தொடரில் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமான தமிழக வீரர் நடராஜன் குறித்தும் பேசினார்.
Samayam Tamil Hardik Pandya


“நடராஜனின் கிரிக்கெட் பயணத்தைப் பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அது உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் இருந்தது. அவர் ஆஸ்திரேலிய தொடரில் தடம் பதிக்க வேண்டும். கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, சமாளித்து இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்” என்றார். மேலும் பேசிய அவர், “நெருக்கடியான நேரத்தில் களமிறங்கினேன்.

சில நல்ல ஓவர்கள் கிடைத்ததால் அழுத்தத்திலிருந்து விடுபட்டு விளையாட முடிந்தது. 250-270 ரன்கள் தான் எங்களது இலக்காக இருந்தது. ஜடேஜாவும் நானும் இதை மனதில் வைத்துத் தான் விளையாடினோம். பவுண்டரி எல்லைகள் பெரிது எனத் தெரியும். அதேசமயம், ஆஸ்திரேலிய அணி பவுன்சர்களை கொண்டு தாக்குவார்கள் எனவும் தெரியும் (கடந்த போட்டியின் அனுபவம்).

சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்!

அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தேன். அதனால்தான், 70 பந்துகளில் 90 ரன்கள் அடிக்க முடிந்தது. ஸ்கோரும் 300 ரன்களை கடந்தது” என்றார். இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருந்த நிலையில், அந்த மோசமான சாதனை இப்போட்டி மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது.

தொடர் நாயகனாக ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். டி20 தொடர் 4 (நாள்), 6, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் நடராஜன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்