ஆப்நகரம்

அம்பேத்கரை அவமதித்த ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ட்விட் செய்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 22 Mar 2018, 12:20 pm
ராஜஸ்தான்: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ட்விட் செய்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ஹர்திக் பாண்டியா
அம்பேத்கர் பிரச்சனையில் சிக்கிய பாண்டியா மீது வழக்குப்பதிவு


இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா, கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அம்பேத்கரை இட ஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அவரது கருத்திற்கு எதிர்ப்புகள் வந்ததையடுத்து, தனது பதிவை அவர் நீக்கினார்.

இந்த சம்பவத்தையடுத்து, டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையிலும், அரசியலமைப்பு சட்டத்தை இழிவுப்படுத்தும் வகையிலும் பதிவிட்ட ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர் முகமது ஷமி மீது வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், இப்போது பாண்டியா மீதும் வழக்குகள் பாய்ந்திருப்பது பிசிசிஐக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்