ஆப்நகரம்

மைதானத்திலேயே ஜடேஜா, மண்டையை உடைக்க தெரிந்த பாண்டியா!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பைனலில், தன்னை ரன் அவுட்டாக்கிய ரவிந்திர ஜடேஜா மீது அளவுக்கு அதிகமாக பாண்டியா கோவமடைந்தார்.

TOI Sports 18 Jun 2017, 10:17 pm
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பைனலில், தன்னை ரன் அவுட்டாக்கிய ரவிந்திர ஜடேஜா மீது அளவுக்கு அதிகமாக பாண்டியா கோவமடைந்தார்.
Samayam Tamil hardik pandya was thoroughly unimpressed with his run out
மைதானத்திலேயே ஜடேஜா, மண்டையை உடைக்க தெரிந்த பாண்டியா!



இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ’பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, அசார் அலி (59), பஹார் (114), பாபர் (46), ஹபீஸ் (57*) ஆகியோர் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி, 180 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதில், ரோகித், தவான், கோலி, யுவராஜ், தோனி, உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொதப்ப, ஹர்திக் பாண்டியா மட்டும் அதிவேக அரைசதம் அடித்து இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

இந்நிலையில், அதிரடியாக ரன்கள் சேர்த்த பாண்டியாவை, ரவிந்திர ஜடேஜா தேவையில்லாமல் ரன் அவுட்டாக்கிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்திக் பாண்டியா, பெவிலியன் செல்லும் வரை ஆத்திரத்தில் கத்திக்கொண்டே சென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்