மும்பையின் அந்தேரி ரயில்நிலைய பிளாட் பார்மில் கார் ஓட்டியதாக தவறாக செய்தி வெளியிட்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக ஹர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் மும்பையின் அந்தேரி ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டியதாக 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரர் ஹர்பிரீத் சிங் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
தவிர, அவரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. ஆனால் இந்த சம்பவத்திற்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பிரீத் சிங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் உண்மையில் இந்த சம்பவத்தில் கைதானது மற்றொரு ஜூனியர் கிரிக்கெட் வீரர் ஹர்மீத் சிங். ஆனால் முதலில் வெளியான செய்திகளில் ஹர்பிரீத் சிங் என வெளியானதால், அன்று நடந்த ஐ.பி.எல்.,. ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக ஹர்பிரீத் புலம்பியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பிரீத் கூறுகையில்,’ இந்த சம்பவத்தால், நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக நான் கொடுத்த விலை மிகவும் அதிகம். இனி இதை நான் எப்படி சரி செய்ய முடியும். முடிந்தது முடிந்தது தான்,’ என்றார்.
Harpreet Singh remained unsold at IPL auction, and the reason was the incorrect tweet about his arrest.
குடிபோதையில் மும்பையின் அந்தேரி ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டியதாக 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரர் ஹர்பிரீத் சிங் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
தவிர, அவரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. ஆனால் இந்த சம்பவத்திற்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பிரீத் சிங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் உண்மையில் இந்த சம்பவத்தில் கைதானது மற்றொரு ஜூனியர் கிரிக்கெட் வீரர் ஹர்மீத் சிங். ஆனால் முதலில் வெளியான செய்திகளில் ஹர்பிரீத் சிங் என வெளியானதால், அன்று நடந்த ஐ.பி.எல்.,. ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக ஹர்பிரீத் புலம்பியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பிரீத் கூறுகையில்,’ இந்த சம்பவத்தால், நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக நான் கொடுத்த விலை மிகவும் அதிகம். இனி இதை நான் எப்படி சரி செய்ய முடியும். முடிந்தது முடிந்தது தான்,’ என்றார்.
Harpreet Singh remained unsold at IPL auction, and the reason was the incorrect tweet about his arrest.