ஆப்நகரம்

அடப்பாவமே மாயங்க் அகர்வால் மிகப்பெரிய ‘கஜினி’யாம்... சீக்ரெட் சொன்ன சக வீரர்!

இந்தூர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய துவக்க வீரர் மாயங்க் அகர்வால், பேசுவதற்கே யோசிக்கும் ஆள் என அவருடன் விளையாடிய ஹர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Nov 2019, 12:30 pm
இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடக்கிறது. இதில் இந்திய அணியின் துவக்க வீரர் மாயங்க் அகர்வால், இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
Samayam Tamil Mayank Agarwal


கூச்ச சுபாவம்...
இந்நிலையில் மாயங்க் அகர்வால் உடன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்ற ஹர்பிரீத் சிங், மாயங்க் குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஹர்பிரித் கூறுகையில், “ மாயங்க் அகர்வால் மிகவும் கூச்சசுபாவமானவர். அவரை பேச வைக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டும்.

ரொம்ப அமைதி
அணியில் இருக்கும் எல்லா வீரர்களும் அவரவர் கதைகளை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் மாயங்க் அகர்வலால் அமைதியாக அதை புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருப்பார். ஆனால் அவர் எப்போது பயிற்சிக்கு வரும் போது தனது பாக்ஸை மறந்துவிட்டு வருவார்.

மீண்டும் தத்தளிக்கும் வங்கதேசம் : இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி!

பெரிய கஜினி...
அதனால் அவரை நாங்கள் செல்லமாக கஜினி என அழைப்போம். சின்ன சின்ன பொருட்களைக் கூட மறந்துவிட்டு அதை 15 - 20 நிமிடங்கள் தேடி மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவார். அது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ’ என்றார்.

டெஸ்ட் அரங்கில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்த மாயங்க் அகர்வால், மொத்தமாக 28 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசினார். இவரின் மூன்று சதத்தில் 2 இரட்டைசதம் அடங்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்