ஆப்நகரம்

பிறந்தநாளில் முச்சதம் விளாசிய பிரஷாந்த்

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரஷாந்த் சோப்ரா என்ற வீரர் தன் பிறந்தநாளில் முச்சதம் விளாசி அசத்தினார்.

TNN 7 Oct 2017, 8:58 pm
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரஷாந்த் சோப்ரா என்ற வீரர் தன் பிறந்தநாளில் முச்சதம் விளாசி அசத்தினார்.
Samayam Tamil himachal ranji player scores triple century on his birthday
பிறந்தநாளில் முச்சதம் விளாசிய பிரஷாந்த்


ரஞ்சிக் கோப்பை தொடரில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே தர்மசாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் இமாச்சல் அணி தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா முச்சதம் விளாசினார்.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 271 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த அவர் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முச்சதத்தை பூர்த்தி செய்தார்.

இன்று அவரது பிறந்தநாள் என்பதால் பிறந்தநாளில் முச்சதம் அடித்த சாதனையை வசப்படுத்தியுள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இமாச்சல் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 729 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாப் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்