புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தவான் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை, நாடு முழுதும் உள்ள மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய நோக்கம். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை அமைகிறது.
வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும்,. திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
ஹேப்பி ஹோலி:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தவான் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய நோக்கம். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை அமைகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தவான் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.