ஆப்நகரம்

கட்டாந்தரையில் பந்துவீச்சு பயிற்சி செய்யும் குல்தீப்!

கான்கிரீட் தரையில் பந்துவீசி பயற்சிசெய்வதே தன் பந்துவீச்சின் ரகசியம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

TOI Sports 18 Oct 2017, 8:15 pm
கான்கிரீட் தரையில் பந்துவீசி பயற்சிசெய்வதே தன் பந்துவீச்சின் ரகசியம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
Samayam Tamil how bowling on concrete tracks helped kuldeep
கட்டாந்தரையில் பந்துவீச்சு பயிற்சி செய்யும் குல்தீப்!


இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அண்மையில் நடத்து முடிந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர்களில் அசத்தாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹேட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி கலக்கினார். இதன் மூலம் அணியில் அவரது இடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த குல்தீப் யாதவ், தன்னால் எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக பந்துவீச முடியும் என்றார். மேலும், “நான் சின்ன வயதிலிருந்து சிமெண்ட் தரையில் பந்துவீசியிருக்கிறேன். கான்கிரீட் தரையில் சிறப்பாக சுழற்பந்துவீச முடிந்தால் எந்த ஆடுகளமாக இருந்தாலும் சிறப்பாக பந்துவீச முடியும்.” என்று அவர் கூறியுள்ளார்.

அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்குப் பதிலாக குல்தீப், சஹல், ஆகியோர் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெறுவது பற்றி கருத்து தெரிவித்த அவர், “அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு மாற்று வீரர்களே இருக்க முடியாது. அவர்கள் இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்