ஆப்நகரம்

இந்தியா இல்லேன்னா என்னத்த கிரிக்கெட் : புலம்பும் வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி விலகினால், தொடரில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது என கிரிக்கெட் வீரர்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.

TOI Sports 5 May 2017, 7:55 pm
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி விலகினால், தொடரில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது என கிரிக்கெட் வீரர்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.
Samayam Tamil huge loss if india pull out of champions trophy 2017
இந்தியா இல்லேன்னா என்னத்த கிரிக்கெட் : புலம்பும் வீரர்கள்!


இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் போட்டியை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியும், ஐசிசி., யின் முழுநேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்கும் எல்லா அணிகளும் தங்களது அணியை வெளியிட்ட நிலையில், கிரிக்கெட் வல்லரசான இந்தியா, இன்னும் ஐசிசியை ஆட்டம் காண வைத்து வருகிறது. இத்தொடருக்காக எல்லா அணிகளும் முழுமையாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணி இத்தொடரில் பங்கேற்குமா, இல்லையா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமலேயே உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி, இத்தொடரில் பங்கேற்க வேண்டும் என ஆம்லா, மில்லர் உள்ளிட்ட தென் ஆப்ரிக்க வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மில்லர் கூறுகையில்,’சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி பங்கேற்காவிட்டால், அதுமிகப்பெரிய இழப்பு. இந்திய அணிக்கு உலகம் முழுதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால் பங்குதாரர்களுக்கு இது நிச்சயம் சிறந்த விஷயமல்ல.’ என்றார்.

இதுகுறித்து ஆம்லா கூறுகையில்,’ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்திய அணி விலகினால், அது இத்தொடருக்கே மிகப்பெரிய இழப்பு. கடந்த தொடரில் கோப்பை வென்றது இந்திய அணி தான். அதனால் இந்திய அணி விளையாடுவது அவசியம் தான்.’ என்றார்.

Huge loss if India pull out of Champions Trophy 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்