ஆப்நகரம்

அடிச்சு சொல்றேன் கோலி இந்த வயசு வரைக்கும் விளையாடுவார்? இத்தனை சதம் அடிப்பார்: அக்தர்!

இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 44வது வயது வரை கிரிக்கெட் விளையாடுவார் என்றும், 120 சர்வதேச சதங்கள் விளாசுவார் என்றும்,’ முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

TOI Sports 22 Nov 2017, 4:19 pm
லாகூர்: ’இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 44வது வயது வரை கிரிக்கெட் விளையாடுவார் என்றும், 120 சர்வதேச சதங்கள் விளாசுவார் என்றும்,’ முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i am sure virat can play until he is 44 shoaib akhtar
அடிச்சு சொல்றேன் கோலி இந்த வயசு வரைக்கும் விளையாடுவார்? இத்தனை சதம் அடிப்பார்: அக்தர்!


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர். இவர் இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 44வது வயது வரை கிரிக்கெட் விளையாடுவார் என்றும் சச்சினின் சாதனை சதத்தை முறியடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்தர் கூறுகையில்,’ ஒருநாள் போட்டிகளில் கோலி ஏற்கனவே 32 சதங்களை விளாசி ஜாம்பவானாகிவிட்டார். கோலியை சச்சினுடன் ஒப்பிடுவது முறையல்ல. கோலி நவீன கால ஜாம்பவான். ஆனால் சச்சினின் சத சாதனை முறியடிக்கும் ஒரே தகுதி கோலிக்கு மட்டுமே உள்ளது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா அல் ஹக் 43 வயது வரை கிரிக்கெட் விளையாடும் போது, கோலியால் நிச்சயமாக 44 வயது வரை விளையாட முடியும். எனது கணிப்பின் படி கோலி 120 சர்வதேச சதங்கள் விளாசுவார்.’ என்றார்.

Akhtar also backed him to score 120 international centuries

அடுத்த செய்தி

டிரெண்டிங்