ஆப்நகரம்

’கேக்’கில் இருந்த பேட்டை வெட்ட மனமில்லாத சச்சின்!

தனது பிறந்தநாள் கேக்கில் இருந்த கிரிக்கெட் பேட்டை வெட்ட கூட சச்சினுக்கு மனம் வரவில்லை.

TOI Sports 25 Apr 2017, 11:18 am
மும்பை: தனது பிறந்தநாள் கேக்கில் இருந்த கிரிக்கெட் பேட்டை வெட்ட கூட சச்சினுக்கு மனம் வரவில்லை.
Samayam Tamil i cant believe i am 44 says sachin tendulkar
’கேக்’கில் இருந்த பேட்டை வெட்ட மனமில்லாத சச்சின்!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த 28வது லீக் போட்டியில், மும்பை, புனே அணிகள் மோதின.

இந்நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சின் நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பை அணியின் சிறப்பு ஆலோசகரான சச்சினுக்காக, மும்பை அணி நிர்வாகம் சார்பில், ஸ்பெஷலாக, பேட், பால் வைத்த ஒரு கேக் ஆர்டர் செய்து, அதை போட்டியின் நடுவே வெட்டி கொண்டாடினர்.

VIDEO: @sachin_rt celebrates his Birthday at Wankhede stadium https://t.co/LQfJ4sbzY1 @HaydosTweets #MIvRPS — IndianPremierLeague (@IPL) April 24, 2017 அப்போது வர்ணனையாளர் மாத்யூ ஹேடன் கேக்கை வெட்ட சொன்ன போது, கத்தியை எடுத்த சச்சின் ’பேட்டை மட்டும் என்னால் வெட்ட முடியாது. மைதானத்தில் அந்த பேட்டை கேப்புகளில் பந்தை அனுப்ப மட்டுமே நான் கட் செய்வேன். எனக்கு 44 வயதாகி விட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. மைதானத்தில் பிறந்தநாள் கொண்டாடுவது புது அனுபவமாக உள்ளது. எப்போதும் அமையாகவே கேக் வெட்டி கொண்டாட விரும்புவேன். நல்ல வேலையாக ஒட்டு மொத்த மைதானமே எனக்காக ‘ஹாப்பி பர்த் டே’ பாடவில்லை. என்றார்.

MUMBAI: Indian cricket icon Sachin Tendulkar on Monday said that he could not believe he has turned 44 as he celebrated his birthday in front of thousands of adoring fans at the Wankhede Stadium.

அடுத்த செய்தி

டிரெண்டிங்