ஆப்நகரம்

‘ப்ளீஸ்’ தயவு செஞ்சு…இவர மட்டும் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக போடாதீங்க: கெஞ்சும் ஷேன் வார்ன்!

இந்திய டெஸ்ட் அணிக்கு அவரை மட்டும் கேப்டனாக போட வேண்டாம் என ஷேன் வார்ன் பேசியுள்ளார்.

Samayam Tamil 27 Jan 2022, 1:36 pm
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய டெஸ்ட் அணிக்கு பெரும் பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது.
Samayam Tamil ஷேன் வார்ன்


கரணம், இவர் மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி அதில் 40 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்தார். அதுமட்டுமல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அணியை வெற்றிகரமாக திகழவைத்து, வரலாற்றுச் சாதனைகளையும் படைக்க வைத்தார்.

IPL 2022: ‘மெகா ஏலம்’…20+ கோடிகளை குவிக்கப் போகும் 5 இந்தியர்கள்: சிஎஸ்கே வீரருக்கும் இடம்!

தரவரிசையில் முன்னேற்றம்:


மேலும், 2014ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருந்த அணியை, 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் 1 அணியாக திகழ வைத்தார். இவர் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை டெஸ்ட் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பலர் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்து வருகின்றனர். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட ரிஷப் பந்தை கேப்டனாக போட்டால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

வார்ன் பேட்டி:

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் ஷேன் வார்ன், கேப்டன் பதவியை ரிஷப் பந்திற்கு தரக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். “இந்திய டெஸ்ட் அணி கேப்டனுக்கான பரிந்துரை லிஸ்டில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை ஜஸ்பரீம் பும்ராதான் அந்த இடத்திற்கு தகுதியானவர். ஆனால், அதற்குமுன் ரோஹித் ஷர்மா தலைமையில் அவர் சில வருடங்கள் துணைக் கேப்டனாக செயல்பட வேண்டும். ஒரு விக்கெட் கீப்பர், அணியின் கேப்டனாக இருப்பதை நான் விரும்பவில்லை. எப்போதுமே விக்கெட் கீப்பர்கள் நல்ல துணைக் கேப்டனாக மட்டுமே இருப்பார்கள்” எனக் கூறினார்.

ஆசிய XI-யை கதறவிட்ட பிரட் லீ, பீட்டர்சன்: தரமான சம்பவம்…உலக XI அபார வெற்றி!

மேலும் பேசிய அவர், “தயவுசெய்து ரிஷப் பந்தை மட்டும் கேப்டனாக மாற்றாதீர்கள். எனக்கு மிகவும் பிடித்த வீரர் அவர்தான். அவரை, அவரின் போக்கிலேயே விளையாட விடுங்கள். ‘நமது அணியின் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும்? என்பதை அவர் உணர்ந்துவிட்டால், நேரத்திற்கு தகுந்தார்போல் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து விடுவார். அவர் அதிரடி பாணியை கைவிட்டுவிடக் கூடாது. மிகச்சிறந்த வீரர்” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்