ஆப்நகரம்

India vs Australia: என்னால் 200 ரன்கள் அடிக்க முடியும்: தெளிவான காரணத்தை சொன்ன ரஹானே!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய துணை கேப்டன் ரஹானே சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Dec 2018, 4:38 pm
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய துணை கேப்டன் ரஹானே சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rahane


ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது.

டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

ரஹானே நம்பிக்கை :
பாக்ஸிங் டே போட்டி குறித்து பேசிய ரஹானே, “ஆட்டத்தின் போக்கை பார்த்து, மைதானத்தின் தன்மையை நன்கு உணர்ந்து கொண்டால் என்னால் தம் அல்லது இரட்டை சதம் கூட அடிக்க முடியும்.

ஆஸ்திரேலியா மைதானத்தில் விளையாடுவது எளிதான விஷயம் இல்லை. இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைக்கும் பட்சத்தில் 3,4,5 வதாக களமிறங்கும் வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாட முடியும்.

அதனால் தான் அதிக நேரம் எடுத்து விளையாடினாலும் புஜாரா போன்ற வீரர்கள் பாராட்டப்படுகின்றனர்.

உண்மையில் நான் அதிரடி கிரிக்கெட் வீரனாக இருந்தேன். ஆனால் நான் 4 அல்லது 5 வது இடத்தில் களமிறங்குவதால், ஆட்டத்தின் போக்கை பொறுத்து விளையாட வேண்டியுள்ளது.

இந்த முறை இந்தியா சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன். அதனால் ஆட்டத்தின் போக்கு நன்றாக அமையும் பட்சத்தில் நான் 100 அல்லது 200 ரன்களை கூட எடுக்க வாய்ப்புள்ளதாகவும், சூழல் அதற்கு உதவும் என நம்புகிறேன். ” என துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
ரஹானே அடிலெய்ட் டெஸ்டில் 13& 70 மற்றும் பெர்த் டெஸ்டில் 51 & 30 ரன்கள் என சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்