ஆப்நகரம்

கிரிக்கெட்டின் நலனுக்காக ராஜினாமா செய்தேன்: சேவாக்

டெல்லி கிரிக்கெட் நலனுக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Sep 2018, 10:53 pm
டெல்லி கிரிக்கெட் நலனுக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sehwag


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இக்குழுவில் ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பந்துவீச்சு பயிற்சியாளராக மனோஜ் பிரபாகரை நியமிக்க வேண்டும் என இந்தக் குழு பரிந்துரைத்தது. இதனை டெல்லி கிரிக்கெட் சங்கம் ஏற்கவில்லை. இதனையடுத்து, ஆலோசனைக் குழுவிலிருந்த சேவாக் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

இது குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட சேவாக், “டெல்லி கிரிக்கெட்டின் நலன் கருதியே ஆலோசனைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்