ஆப்நகரம்

ஒரே ஓவரில் ஆறு தடவை ‘டைவ்’ அடிப்பேன்: கோலி உறுதி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 157 ரன்கள் குவித்து அசத்தினார். 150வது ரன்னை எடுக்கும்போது ரன்அவுட் ஆவதைத் தவிர்க்க டைவ் அடித்து ரன்னைப் பூர்த்தி செய்தார்.

Samayam Tamil 26 Oct 2018, 12:49 pm
அணிக்காக ஒரு ஓவரில் ஆறு தடவைகூட டைவ் அடிப்பேன் என இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil img_1540506961432_422


இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை 0-2 என இழந்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோற்ற அந்த அணி இரண்டாவது போட்டியைப் போராடி டை ஆக்கியது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 157 ரன்கள் குவித்து அசத்தினார். 150வது ரன்னை எடுக்கும்போது ரன்அவுட் ஆவதைத் தவிர்க்க டைவ் அடித்து ரன்னைப் பூர்த்தி செய்தார்.

இது குறித்து போட்டிக்குப் பின் பேசிய அவர், “நான் ஒரு ஓவரில் ஆறு முறை டைவ் அடிக்க வேண்டியிருந்தாலும், ஆறு முறையும் டைவ் அடிப்பேன்.” என்றார். மேலும், “அது என் கடமை. அதற்காகத்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“எதையும் போகட்டும் என விட்டுவிடக்கூடாது. எந்த சூழலையும் எளிமையாக எடுத்துக்கொள்ளக் கூடாது.” எனவும் விராட் கோலி தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்