ஆப்நகரம்

வங்கதேசத்தை விரட்டியடிக்க தந்திரம் செய்ததே தோனி தான்! : கோலி பெருமிதம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச பேட்டிங்கை அடக்க காரணமாக இருந்தவரே தோனி தான் என இந்திய கேப்டன் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

TOI Sports 18 Jun 2017, 12:40 pm
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச பேட்டிங்கை அடக்க காரணமாக இருந்தவரே தோனி தான் என இந்திய கேப்டன் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
Samayam Tamil icc champions trophy 2017 virat kohli credits ms dhoni for this tactical move vs bangladesh
வங்கதேசத்தை விரட்டியடிக்க தந்திரம் செய்ததே தோனி தான்! : கோலி பெருமிதம்


இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

தோனியின் தந்திரம் :
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், முதல் 2 விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்தது. ஆனால் அதன் பின் இணைந்த தமிம் இக்பால், முஸ்பிகிர் ரஹீம் ஜோடி அசத்தலாக விளையாடி 123 ரன்களை குவித்தது.

இந்திய அணியின் 5வது பவுலரான ஹர்திக் பாண்டியாவின் பந்தை வெளுத்து வாங்கி வந்தனர் வங்கதேச அணியினர். அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் தவித்த போது தோனி கொடுத்த யோசனை தான் கேதார் ஜாதவ் பவுலிங்.

154 ரன்களுக்கு வெறும் 2 விக்கெட் மட்டும் இழந்திருந்த வங்கதேசம், கேதார் ஜாதவ் பவுலிங்கால் அடுத்தடுத்து தமிம் இக்பால், முஸ்பிகிர் ரஹீம் ஆகியோரை அவுட்டாக்கி அசத்தினார்.

இந்த ஜோடி மட்டும் நீடித்திருந்தால், வங்கதேச அணி நல்ல ஸ்கோரை எட்டியிருக்கும். தந்திரமாக கேதர் ஜாதவை பயன்படுத்த கூறியது தோனியின் யோசனை போட்டியையே புரடியது என கோலி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்