ஆப்நகரம்

வீரா்கள் தவறு செய்தால் ரெட் காா்டு; கால் பந்தை தொடா்ந்து கிாிக்கெட்டிலும் அறிமுகம்

கிாிக்கெட் மைதானத்தில் அத்துமீறி நடந்து கொள்ளும் வீரா்களுக்கு ரெட் காா்டு காண்பித்து வெளியில் அனுப்பும் முறை வருகிற 28ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

TOI Contributor 26 Sep 2017, 10:53 pm
கிாிக்கெட் மைதானத்தில் அத்துமீறி நடந்து கொள்ளும் வீரா்களுக்கு ரெட் காா்டு காண்பித்து வெளியில் அனுப்பும் முறை வருகிற 28ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Samayam Tamil icc introduce news rules players will be sent off
வீரா்கள் தவறு செய்தால் ரெட் காா்டு; கால் பந்தை தொடா்ந்து கிாிக்கெட்டிலும் அறிமுகம்


கிரிக்கெட் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது உணர்ச்சி மிகுதியால் வீரர்கள் சில நேரங்களில் விதிமுறையை மீறுவது உண்டு. வீரர்கள் ஸ்லெட்ஜிங் மற்றும் வார்த்தை போர்களில் ஈடுபடும் நிலை ஏற்படும். சில சமயங்களில் வீரா்கள் இதையும் தாண்டி நடந்து கொள்வதும் உண்டு.

தற்போதைய நிலையில் வீரர்கள் எல்லை மீறி நடந்தது நடுவர்களுக்கு தெரியவந்தால், போட்டி முடிந்த பின்னர் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அபராதம் அல்லது சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். இந்த விதிமுறையால் உடனடி தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே, கால்பந்தில் விதிமுறையை மீறும் வீரர்கள் மீது மைதான நடுவர்களே ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றும் விதிமுறை போன்று கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பாிந்துறைகளை மீறி தற்போது இந்த விதிமுறையை ஐசிசி அமலுக்கு கொண்டு வருகிறது.

நாளை மறுநாள் (செப்டம்பர் 28-ந்தேதி) முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது. அதன்பின் வீரர்கள் மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்டால் ரெட் கார்டு பெற்று உடனடியாக வெளியே செல்ல வேண்டியதுதான். இதனால் வீரர்கள் கவனமாக விளையாட வேண்டியது அவசியம்.

இருப்பினும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடாில் இந்த விதிமுறை செயல்படுத்த வாய்ப்பில்லை என்றே தொிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்