ஆப்நகரம்

டி-20 உலகக்கோப்பை குறித்து ஆகஸ்ட் வரை எந்த முடிவும் இல்லை!

துபாய்: ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் வரை எவ்வித முடிவும் எடுக்கப்போவதில்லை என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Apr 2020, 4:53 pm
கொரோனா வைரஸ் உலகம் முழுதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை


6 மாத ஊரடங்கு
தனது நாட்டின் அனைத்து எல்லைகளையும் ஆஸ்திரேலியா மூடியுள்ளது. இந்த ஊரடங்கு வரும் செப்டம்பர் 30 வரை அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்காலம் குறித்து ஐசிசி அறிக்கை மூலம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவித்தது.

ஆகஸ்ட் வரை
ஆனால் தற்போது வரை நிலைமை சரியில்லாத காரணத்தால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வரை டி-20 கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

முதல் ரன் முதல்... 100 வெற்றி வரை... ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய சிஎஸ்கே!

இதுதொடர்பாக ஐசிசியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில், “தற்போது மக்களின் ஆரோக்கியத்துக்கு தான் முன்னுரிமை. இன்னும் ஒரு சில மாதங்களில் நிலைமை மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டின் நிர்வாக குழு நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறது. அதனால் வரும் ஆகஸ்ட் மாதம் வரை டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படப்போவதில்லை. அதனால் அதற்கு முன்பாக எவ்வித அறிக்கையையும் எதிர்பார்க்க வேண்டாம்.” என்றார்.

தனக்கு தானே ஹேர் ஸ்டைலிஸ்டாக மாறிய ஜாம்பவான் சச்சின் !

காலி மைதானங்கள்
மேலும் இந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் , நிலைமை மோசாமாலோ அல்லது எவ்வித முன்னேற்றமோ இல்லாமல் இருந்தாலோ, தொடரை 2022 க்கு ஒத்திவைக்க ஐசிசி திட்டமிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அடுத்தாண்டு இந்தியாவில் மற்றொரு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்