ஆப்நகரம்

டி-20 உலகக்கோப்பை: நாளை முடிவு எடுக்கும் ஐசிசி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நாளை முடிவு எடுக்கவுள்ளது.

Samayam Tamil 7 May 2020, 5:00 pm
உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் தவித்து வருகிறது. இதற்கிடையில் சர்வதேச அளவில் கொரோனா காரணமாக பொருளாதாரம் தாறுமாறாக தத்தளித்து வருகிறது. குறிப்பாக ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil டி-20 உலகக்கோப்பை


நாளை முடிவு
ஆஸ்திரேலியா அனைத்து எல்லைகளையும் 6 மாதத்துக்கு மூடியுள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்காலம் குறித்து ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நாளை முடிவு செய்யவுள்ளது.

மாற்று யோசனைகள்
ஐசிசியை பொறுத்தவரையில் திட்டமிட்டபடி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்பது தான். அதே நேரம் தொடர் தள்ளிப்போகும் நிலை வந்தால் அதற்கான திட்டங்களையும் மாற்று வழிகளையும் யோசிக்க ஐசிசி தயாராகி வருகிறது. இந்நிலையில் ஐசிசியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில், “தற்போதைக்கு வெறும் அறிக்கையை வெளியிடுவதை தவிர வேறு எதுவும் இல்லை. ஐசிசி போர்டு கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. அதில் புது சேர்மன் பொறுப்பேற்கவுள்ளார். அதன் பின் தான் எந்த முடிவும் எடுக்கப்படும்” என்றார்.

ஒலிம்பிக்கில் 10 ஓவர் கிரிக்கெட்... மாஸ்டர் மார்கன் சொல்லும் பிளான்!

இதுகுறித்து மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், “டி-20 உலகக்கோப்பை தொடர் நடந்தாலும் அது மிகப்பெரிய வேலையாகத்தான் இருக்கும். ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு அனுமதி அளிக்குப்படுப்ம் என்பதற்கு எவ்வித உறுதியும் இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 16 அணிகளை அழைத்து செல்வது, மேட்ச் அதிகாரிகள், அந்த மாதம் முழுதுவதுமான உள்ளூர் பயணம் என கெட்டக்கனவாக இருக்கும்” என்றார்.

ஆந்திரா கேஸ் கசிவு: கிங் கோலி, சாய்னா நேவால் இரங்கல்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்