ஆப்நகரம்

IND vs SA: ‘துரோகம்’…தினேஷ் கார்த்திக்கை சேத்துட்டு…இவரை ஏன் நீக்குனீங்க: சுரேஷ் ரெய்னா அதிரடி கேள்வி!

சீனியர் வீரருக்கு இடம் கொடுக்காதது குறித்து சுரேஷ் ரெய்னா கேள்வி எழப்பியுள்ளார்.

Samayam Tamil 23 May 2022, 10:43 am
இந்திய அணி துவக்க வீரர் ஷிகர் தவன், அதிரடியாக விளையாடவில்லை என்றாலும் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க கூடியவர். இதனால் இந்திய ஒருநாள், டி20 அணிகளில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார்.
Samayam Tamil சுரேஷ் ரெய்னா


இந்நிலையில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு அறிமுகமான பிறகு தவனின் இடத்தை பிடித்துக்கொண்டார். இதனால், ஒருநாள் அணியில் தவனுக்கு அவ்வபோது மட்டுமே வாய்ப்புகள் கிடைத்து வந்தன. டி20 அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

ஐபிஎல் 14ஆவது சீசனில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தபோதும், கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இவருக்கு இடம் வழங்கப்படவில்லை. அந்த தொடரில் இந்திய அணி துவக்க வீரர் கே.எல்.ராகுல் சொதப்பியதுதான், இந்தியா லீக் சுற்றுடன் வெளியேற முக்கிய காரணமாக இருந்தது.

700 பவுண்டரிகள்:

இதனால் அடுத்து, தென்னாப்பிரிக்க தொடரின்போது தவனுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் போட்டியில் அசத்திய அவர், அதன்பிறகு சிறப்பாக சோபிக்கவில்லை. மீண்டும் ஓரம்கட்டப்பட்டார். அடுத்து ஐபிஎல் 15ஆவது சீசனில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, பஞ்சாப் அணிக்காக 14 போட்டிகளில் 38 சராசரியுடன் 460 ரன்களை குவித்துள்ளார். மேலும், ஐபிஎல் 700 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற மெகா சாதனையையும் படைத்துள்ளார்.

வாய்ப்பு இல்லை:

இவர் இப்படி ஐபிஎலில் அசத்தியபோதும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கவுள்ள இந்தியாவின் இரண்டாம்தர அணியில் தவனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன்மூலம் இந்திய டி20 அணியில் இனி தவனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் ஐபிஎல் 15ஆவது சீசனில் பெஸ்ட் பினிஷராக திகழ்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா பேட்டி:

இந்த விவகாரம் குறித்து, தற்போது பத்திரிகை ஒன்றுக்கு சுரேஷ் ரெய்னா பேட்டி கொடுத்துள்ளார். அதில், “தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் ஷிகர் தவனை சேர்த்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அருகில் இருப்பவரையும் கலகலப்பாக வைத்திருப்பார். தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்றால், தவனால் ஏன் முடியாது. தவன் ஏமாற்றப்பட்டுள்ளார்” எனக் கூறினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியில் ஓபனர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்