ஆப்நகரம்

பூ...வாக இருக்கும் நான், தேவைப்பட்டால் புயலாக மாறுவேன்:புஜாரா!

எதிரணி வீரர்களை சீண்டுவது இந்திய பவுலர்களுக்கு உதவும் என்றால் அதை செய்ய நான் தயாராக உள்ளேன்,’ என புஜாரா தெரிவித்துள்ளார்.

TOI Sports 8 Aug 2017, 7:36 pm
கொழும்பு: எதிரணி வீரர்களை சீண்டுவது இந்திய பவுலர்களுக்கு உதவும் என்றால் அதை செய்ய நான் தயாராக உள்ளேன்,’ என புஜாரா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil if sledging helps our bowlers i will sledge cheteshwar pujara
பூ...வாக இருக்கும் நான், தேவைப்பட்டால் புயலாக மாறுவேன்:புஜாரா!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 12ல் கண்டியில் துவங்குகிறது.

இதில் அசத்தி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, எதிரணி வீரர்களை சீண்டுவது இந்திய பவுலர்களுக்கு கைகொடுக்கும் என்றால், அதை செய்யவும் ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புஜாரா கூறுகையில்,’பிபா கால்பந்து தொடர் பார்வையாளராக இருந்த போது, மிகவும் கூச்சலிட்டுள்ளேன். தற்போது அதே போல, பீல்டிங் செய்யும் போது பவுலர்களை உற்சாகப்படுத்த அதை செய்ய துவங்கியுள்ளேன். ஆனால் நான் அதில் இன்னும் கத்துக்குட்டிதான். இந்திய பவுலர்களுக்கு இது கைகொடுக்கும் என்றால், அதை செய்யவும் நான் ரெடி.’ என்றார்.

COLOMBO: Cheteshwar Pujara has never been known for sledging opposition batsmen but he is not averse to the idea if it helps the bowler.

அடுத்த செய்தி

டிரெண்டிங்