ஆப்நகரம்

இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் பதவியேற்பு விழாவில் கபில் தேவ், சச்சின் ஆகியோர் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் உளவுத்துறை தலைவர் ஏஎஸ் துலத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jul 2018, 2:13 pm
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் பதவியேற்பு விழாவில் கபில் தேவ், சச்சின் ஆகியோர் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் உளவுத்துறை தலைவர் ஏஎஸ் துலத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil imran khan


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 25ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் முடிவு 26ம் தேதி முழுமையாக வெளியானது. இதில் பாகிஸ்தான் தெஹரிக்-இ-இன்சாஃப் கட்சி தலைவர் இம்ரான் கான் அமோக வெற்றி பெற்று பிரதமராக உள்ளார்.

இவர் பாகிஸ்தான் சுதந்திர தினமான் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கபில் தேவ், சச்சின் பங்கேற்பார்கள்?
இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பதால், இம்ரான் கானின் பதவியேற்பு விழாவிற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான கபில் தேவ், கவாஸ்கர், சச்சின் ஆகியோர் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் தலைவரும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவராக இருந்த ஏஎஸ் துலத் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானும், கவாஸ்கரும் அமர்ந்து என்ன தான் ஒன்றாக விருந்து சாப்பிட்டால் கூட இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையை அவர்கள் தீர்க்க முடியாது என ஏஎஸ் துலத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்