ஆப்நகரம்

தட்டுத்தடுமாறி கரையேறிய வங்கதேசம்: இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.

TOI Sports 15 Jun 2017, 6:25 pm
பர்மிங்ஹாம்: இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.
Samayam Tamil ind need 265 runs to win against ban to reach icc champions trophy final
தட்டுத்தடுமாறி கரையேறிய வங்கதேசம்: இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!



இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது.

பர்மிங்ஹாமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை, ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

அசத்தல் துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு, துவக்க வீரர் சவுமியா சர்காரை, முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் போல்டாக்கினார். பின் வந்த சபீர் ரஹீம் (19), ஷாகிப் (15), மகமதுல்லா (21) என யாரும் தாக்குபிடிக்கவில்லை.

முஷ்பிகுர் ஆறுதல்:
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில், அதிர்ஷ்ட்டத்தால் தாக்குபிடித்த தமிம் இக்பால் (70) அரைசதம் கடந்து அவுட்டானார். இவருக்கு கம்பெனி கொடுத்த முஷ்பிகுரும் (61) அடுத்து நடையைகட்ட, வங்கதேச அணியின் ரன் வேகம் குறைந்தது.

கடைசி நேரத்தில், கேப்டன் முஸ்ரபே மொர்த்தஷா தனியாக மல்லுக்கட்டிய வங்கதேச அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்