ஆப்நகரம்

பாக்.,கிடம் பலிக்காத பவுலர்கள் பாட்சா: பதிலடி கொடுப்பார்கள் பேட்ஸ்மேன்கள்?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், இந்திய பவுலர்கள் படுமோசமாக சொதப்ப, பாகிஸ்தான் அணி, 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் எடுத்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

TOI Sports 18 Jun 2017, 6:46 pm
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், இந்திய பவுலர்கள் படுமோசமாக சொதப்ப, பாகிஸ்தான் அணி, 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் எடுத்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Samayam Tamil ind need 339 to win agianst pak icc champions trophy final
பாக்.,கிடம் பலிக்காத பவுலர்கள் பாட்சா: பதிலடி கொடுப்பார்கள் பேட்ஸ்மேன்கள்?


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லண்டனில் நடக்கும் இன்றைய பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சொதப்பிய பும்ரா:
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, பஹார், அசார் அலி துவக்கம் அளித்தனர். பும்ரா வீசிய போட்டியின் 4வது ஓவரின் முதல் பாலில் பஹார் அவுட்டானார். ஆனால், அம்பயர் சோதித்ததில் இது நோ-பால் என தெரியவர, வெளியேறிய பஹார், மீண்டும் களத்திற்கு திரும்பினார்.

இந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்திக்கொண்டார் பஹார். பஹார், அசார் அலி ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 128 ரன்கள் சேர்த்த போது அசார் அலி (59) அரைசதம் அடித்து அவுட்டானார்.

பஹார் பிரமாதம்:
தொடர்ந்து வந்த பாபர் துணையுடம் இந்திய பந்துவீச்சை பிச்சு எடுத்த பஹார், ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இவர், 114 ரன்கள் எடுத்த போது, ரவிந்திர ஜடேஜாவின் அசத்தலான கேட்சில் வெளியேறினார்.

பின் வந்த அனுபவ மாலிக், பாபர் அசார் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விளாசினர். மாலித் (18) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. அடுத்து வந்த ஹபீஸ் அதிரடியாக ரன்கள் சேர்க்க, இந்திய பவுலர்களின் விக்கெட் வீழ்த்தும் எந்த பாட்சாவும் பழிக்கவில்லை, இதையடுத்து பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிகரன்கள் சேர்த்த அணி என்ற பெருமை பெற்றது பாகிஸ்தான்.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர், பாண்டியா, ஜாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்