ஆப்நகரம்

ஆபத்தான பிட்ச்! 3வது டெஸ்ட் பாதியில் கைவிட வாய்ப்பு

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆடுகளம் ஆபத்தான நிலையில் இருப்பதற்காக கைவிடப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 26 Jan 2018, 4:18 pm
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆடுகளம் ஆபத்தான நிலையில் இருப்பதற்காக கைவிடப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
Samayam Tamil ind v sa 3rd test match could be abandoned considering divets and trouble areas on the pitch
ஆபத்தான பிட்ச்! 3வது டெஸ்ட் பாதியில் கைவிட வாய்ப்பு


தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சோபிக்காததால் இந்திய அணி தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது.

இதனையடுத்து ஜோகன்ஸ்பெர்க்கில் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் 3வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி 3வது நாள் உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், நியூ வாண்டெரெர்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பிட்ச் ஆபத்தான/ஆட்டத்திற்கேற்ற நிலையில் இல்லை என்று கருதிய அம்பயர்கள் உணவு இடைவேளையில் பிட்சை சரிசெய்ய பிட்ச் பராமரிப்பு பணியாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளனர். ஒரு வேளை சரிசெய்யப்பட்ட பின்பும் பிட்ச் மோசமாக இருக்குமானால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்படும்.

பிட்ச்சில் உள்ள விரிசல்களால் எக்குத்தப்பாக பந்து எழும்பி வருகிறது என்றும் அம்பயர்கள் கருதுவதாகத் தெரிகிறது. பிட்ச் நிலை குறித்து அம்பயர்கள் இடையிடையே களத்தில் இருந்த இரு அணி கேப்டன்களுடன் ஆலோசிக்கவும் செய்தனர்.



ஐஐசி விதிகளின்படி, பிட்ச் ஆபத்தான நிலையிலோ விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லாத நிலையிலோ பிட்ச்சை சரிசெய்யுமாறு அம்பயர்கள் பரிந்துரைக்கலாம். இதற்கு இரு அணிகளின் கேப்டன்களும் ஒருமனதாக சம்மதிக்க வேண்டும். ஒருவர் சம்மதிக்காவிட்டாலும் பிட்ச் சரிசெய்யப்படாது. இரு அணி கேப்டன்களும் சம்மதித்த பின்பு பிட்ச் சரிசெய்யப்பட்டு, அதன் பிறகும் மோசமான நிலையே தொடர்ந்தால் ஆட்டத்தைக் கைவிடுவதாக அம்யர்கள் அறிவிப்பார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்