ஆப்நகரம்

IND vs AUS: ‘இப்படி கத்தாதீங்க’…இதெல்லாம் ரொம்ப தப்பு: ரசிகர்கள் செயலால் கோலி அதிருப்தி.. வைரலாகும் வீடியோ!

இப்படி கத்தாதீங்க என ரசிகர்களை பார்த்து கோலி அதிருப்தியுடன் சைகை செய்தார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 21 Feb 2023, 4:10 pm
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டும்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.
Samayam Tamil விராட் கோலி


இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் துவங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி:

டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்றபோது, இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 62/1 ரன்களை குவித்து, 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கி, முதல் செஷனின்போது ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. இதனால், ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்த ஆரம்பித்தார்கள்.

கோலி அதிருப்தி:

அப்போது, விராட் கோலி பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்ய சென்றபோது, ரசிகர்கள் உற்சாக மிகுதியில், ‘ஆர்சிபி, ஆர்சிபி’ என கத்த ஆரம்பித்தார்கள். இதனைப் பார்த்த கோலி, மிகவும் அதிருப்தியடைந்தார். உடனே, தனது ஜெர்சியில் இருந்த இந்தியாவை காட்டி, ‘இந்தியா, இந்தியா’ என உற்சாகப்படுத்துங்கள் என ரசிகர்களை பார்த்து சைகை செய்தார். அதன்பிறகுதான், ரசிகர்கள் இந்தியா, இந்தியா என முழக்கமிட ஆரம்பித்தார்கள்.



ஆஸி படுதோல்வி:

ஆஸ்திரேலிய அணி அந்த மூன்றாவது நாளில் 113/10 ரன்களுக்கு சுருண்டு, இந்திய அணி 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, புஜாரா ஆகியோர் தலா 31 ரன்களை அடித்தார்கள். விராட் கோலி, 20 (31), ஸ்ரீகர் பரத்தும் 23 (22) ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 118/4 ரன்களை குவித்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் மார்ச் 1ஆம் தேதி துவங்கி நடைபெறும்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்