ஆப்நகரம்

IND vs AUS: ‘அவரு டேஞ்சரான பௌலர்’…இந்தியாவை தோற்கடிக்க நிச்சயம் உதவுவார்: ரோஹித்துக்கு பிரெட் லீ எச்சரிக்கை!

அவர் கொஞ்சம் டேஞ்சரான பௌலர், நிச்சயம் திருப்பி கொடுப்பார் என பிரெட் லீ பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 21 Feb 2023, 9:47 am
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டும்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.
Samayam Tamil பிரெட் லீ, ரோஹித், கோலி


இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் துவங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

ஒரேயொரு நல்ல விஷயம்:

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி படுமோசமாக சொதப்பியது. இருப்பினும், ஒரேயொரு நல்ல விஷயம் அந்த அணிக்கு நடந்துள்ளது. அது, ஸ்பின்னர் டோட் மர்பிதான். முதல் டெஸ்டில், ஒரேயொரு இன்னிங்ஸ் பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியில் மர்பி 7/124 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அந்த 7 விக்கெட்களில் ஐந்து கே.எல்.ராகுல், ரவி அஸ்வின், புஜாரா, கோலி, ஜடேஜா ஆகியோரது விக்கெட்களும் அடங்கும்.

இரண்டாவது டெஸ்டிலும் மர்பி (2,1) 3 விக்கெட்களை சாய்த்தார். இந்நிலையில், இவர் குறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிரெட் லி, கடைசி இரண்டு டெஸ்ட்களில் மர்பி நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வெற்றியை பெற்றுக்கொடுக்க வாய்ப்புள்ளது எனப் பேசியுள்ளார்.

பிரெட் லீ பேட்டி:

அதில், ‘‘நாதன் லைனுக்கு அடுத்து யார் ஆஸ்திரேலிய டெஸ்ட் ஸ்பின்னராக இருப்பார் என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்தது. அதற்கு மர்பியின் செயல்பாடு பதிலளித்துள்ளது. முதல் போட்டியிலேயே ஆச்சரிப்படும் வகையில் அபாரமாக செயல்பட்டு அசத்தினார். இவரால், கடைசி இரண்டு போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு, மேட்ச் வின்னராக இருக்க முடியும். அந்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசி வருகிறார்’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘இந்த தொடர் மட்டுமல்ல, இன்னமும் கடினமான தொடர்கள் இவருக்காக காத்திருக்கிறது. இனி அடுத்தடுத்த தொடர்களில் இவர் சேர்க்கப்பட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, உலகமே மர்பியின் செயல்பாடுகளை உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது. இவரால், தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

கடைசி 2 டெஸ்ட்:

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. கடைசி டெஸ்ட் மார்ச் 9ஆம் தேதி துவங்கும். இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி டிரா செய்தால்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு சிக்கல் இல்லாமல் முன்னேற முடியும்.

இல்லெயென்றால், நியூசிலாந்து மற்றும் இலங்கை டெஸ்ட் தொடரில் (2 போட்டிகள்), இலங்கை அணி ஒரு போட்டியிலாவது டிரா ஆவது செய்ய வேண்டும். அப்போதுதான், ஆஸி பைனலுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்