வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் துவங்கியுள்ள முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் புஜாரா 90 (203), ஷ்ரேயஸ் ஐயர் 86 (192), ரிஷப் பந்த் 46 (45) போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணி 293/7 என்ற நிலையில் இருந்தது. இதனால், இந்தியா அதிகபட்சமாக 350 ரன்களை சேர்த்து, ஆல்-அவுட் ஆகிவிடும் என்று கருதப்பட்டது.
அஸ்வின், குல்தீப் அதிரடி:
இந்நிலையில், டெய்ல் எண்டர்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அஸ்வின் அவ்வபோது பெரிய ஸ்கோர் அடிப்பவர் என்பதால், இவர் சிறப்பாக விளையாடியது ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால், மறுபக்கம் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்றும் இல்லாத வகையில் பேட்டிங்கிலும் அசத்தியது தனிக் கவனம் பெற்றது. இறுதியில் அஸ்வின் 58 (113), குல்தீப் யாதவ் 40 (114) இருவரும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்ததால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404/10 ரன்களை சேர்த்தது.
வங்கதேச இன்னிங்ஸ்:
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா தொடர்ந்து அபாரமாக பந்துவீசியது. முதல் 4 விக்கெட்களில் மூன்றை முகமது சிராஜ் எடுத்துக் கொடுக்க, அடுத்து குல்தீப் யாதவ் அபாரமாக செயல்பட்டு 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால், வங்கதேச அணி 133/8 என திணறி வருகிறது. நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறும். இந்தியா வலுவான நிலையில் இருப்பதால், இன்னிங்ஸ் வெற்றியைப் பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
குல்தீப் அபாரம்:
இந்த முதல் இன்னிங்ஸில் குல்தீப் 40 ரன்களும், 4/33 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 28 வயதாகும் இவர் நீண்ட காலமாகவே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். தற்போது டெஸ்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி, எவ்வித குறையும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், இவரது இடம் உறுதியாவதில் சிக்கல் உள்ளது.
ஆம், ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டுவிட்டால், குல்தீப் யாதவுக்கு இடமே கிடைக்காது. ஒருநாள், டி20 போட்டிகளிலும் இந்திய அணியிலும்தான்.
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் புஜாரா 90 (203), ஷ்ரேயஸ் ஐயர் 86 (192), ரிஷப் பந்த் 46 (45) போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணி 293/7 என்ற நிலையில் இருந்தது. இதனால், இந்தியா அதிகபட்சமாக 350 ரன்களை சேர்த்து, ஆல்-அவுட் ஆகிவிடும் என்று கருதப்பட்டது.
அஸ்வின், குல்தீப் அதிரடி:
இந்நிலையில், டெய்ல் எண்டர்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அஸ்வின் அவ்வபோது பெரிய ஸ்கோர் அடிப்பவர் என்பதால், இவர் சிறப்பாக விளையாடியது ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால், மறுபக்கம் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்றும் இல்லாத வகையில் பேட்டிங்கிலும் அசத்தியது தனிக் கவனம் பெற்றது. இறுதியில் அஸ்வின் 58 (113), குல்தீப் யாதவ் 40 (114) இருவரும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்ததால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404/10 ரன்களை சேர்த்தது.
வங்கதேச இன்னிங்ஸ்:
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா தொடர்ந்து அபாரமாக பந்துவீசியது. முதல் 4 விக்கெட்களில் மூன்றை முகமது சிராஜ் எடுத்துக் கொடுக்க, அடுத்து குல்தீப் யாதவ் அபாரமாக செயல்பட்டு 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால், வங்கதேச அணி 133/8 என திணறி வருகிறது. நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறும். இந்தியா வலுவான நிலையில் இருப்பதால், இன்னிங்ஸ் வெற்றியைப் பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
குல்தீப் அபாரம்:
இந்த முதல் இன்னிங்ஸில் குல்தீப் 40 ரன்களும், 4/33 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 28 வயதாகும் இவர் நீண்ட காலமாகவே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். தற்போது டெஸ்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி, எவ்வித குறையும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், இவரது இடம் உறுதியாவதில் சிக்கல் உள்ளது.
ஆம், ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டுவிட்டால், குல்தீப் யாதவுக்கு இடமே கிடைக்காது. ஒருநாள், டி20 போட்டிகளிலும் இந்திய அணியிலும்தான்.